முல்லைத்தீவு பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு

முல்லைத்தீவு பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிசாரினால் மாவட்ட பேருந்து நிலையவளாகத்தை அண்டிய பகுதிகளில் covid 19 தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தூரத்திணை பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் முன்னேடுக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பாக பொது மக்களை விழிப்பூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இளைஞர் சேவைகள் மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உத்தியோகத்தர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முல்லைத்தீவு அனுமுத்ர பண்டார ஹக்மன, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலீசார் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.