கொழும்பில் ஆணின் சடலம் மீட்பு! – அடையாளம் காணப்படவில்லை.
கொழும்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்தே இந்தச் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
சடலமானது அடையாளம் காண்பதற்காகக் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
