மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு, அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு இன்று 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.
செப்டம்பர் மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில், சதோச நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கரம்போர்ட் மற்றும் செக்கர்போர்டுகள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டு கழகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
