மின்னல் தாக்கியதில் கணவனும் மனைவியும் பலி.

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்திதை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோக நாயகம் யோகேஸ்வரன் 46 மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா வயது 46 ஆகியோரே இவ்விதம் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்கள் விவசாயிகளாவர் .

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் சாகாமம் கற்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப் பயந்து ஓடி வருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய இணைப்பு :-

அம்பாறை, திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.


Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.