மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 3 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

பாலகாட் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஸ்ரா, இந்த மோதலை உறுதிப்படுத்தினார். இது ஹாக் படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வனப்பகுதியில் நக்சல்கள் இருப்பது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து ஆயுதக் குவியலையும் போலீஸார் மீட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.