முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்….
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இது இடம்பெற்றது.
ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
