7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி.

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 50வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடினார்கள் இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. முடிவில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.