இ.போ.ச. பஸ் மோதி ஓட்டோ சாரதி சாவு!
லங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டோவின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரியில் குருவிட்ட, கதன்கொட பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
