சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் படகு வழியாக தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையில் இருந்து இன்று அதிகாலை படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மன்னார், பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தமிழகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்துத் தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதன்போது ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம், உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலையடுத்துத் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
