கிளிநொச்சியில் இரண்டு வீடுகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் இரண்டு குடும்பங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி குடும்பங்களின் அங்கத்தவர்கள் கொழும்பில் கொரோனா பரவக்கூடிய பகுதிக்குச் சென்று வந்தமையாலேயே இவ்விரு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகவலைச் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் கொரோனா பரவக்கூடிய பகுதியான கொழும்புக்குச் சென்று வந்ததை அடுத்தே அவர்கள் குடும்பத்துடன் வசிக்கும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்றொரு குடும்பத்தவர் கொழும்பில் பணிபுரிந்து வந்த நிலையில் மாயவனூரிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். கொரோனாத் தொற்றைத் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக அக்குடும்பமும் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குடும்பங்கள் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மாவட்ட சுகாதார பிரிவினரால் அப்பகுதியில் எச்சரிக்கை விழிப்புணர்வு விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.