முல்லேரியா மருத்துவமனையில் உள்ள பி.சி.ஆர் இயந்திரம் பழுதாகவில்லை – சீன தூதரகம் ட்விட்.

முல்லேரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரின் மாதிரிகளை சோதிக்கும் பி.சி.ஆர் இயந்திரத்தின் சிக்கல் குறித்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

சுமார் 10 மணி நேரம் நீடித்த பரிசோதனையில், இயந்திரம் சாதாரணமாக இயங்குகிறது என்று தூதரகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மேசை மற்றும் அதை வைத்துள்ள சூழல் காரணமாக இயந்திரம் நிலையற்றதாக மாறக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.

இருப்பினும், இயந்திரத்தின் 100% துல்லியத்தை உறுதிப்படுத்த பல சுற்று சோதனைகள் மேற்கொள்ளப்படும், மேலும் இயந்திரத்தை நாளை முதல் மீண்டும் இயக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.