தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் இன்று கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை 1983 படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நகர முனியப்பர் கோவிலடியில் இன்று மாலை 5 மணியளவில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.