முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு ஓகஸ்ட் 6 வரை மறியல்.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதிவானால் இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே என்பவரால் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொய்யான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்த குற்றத்துக்காக அவர் நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, உடல் நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
