தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை.

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

காணித் தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் துப்பாக்கியுடன் ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஹுங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.