கிளிநொச்சியில் முதலாவது கொரோனா தொற்றாளரின் பயண வழித்தடங்கள். 

கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளரின் பயண வழித்தடங்கள்.

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம், மூன்றாம் யூனிட் பகுதியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நபர் பயணித்த பேருந்து வழித்தடங்கள் சுகாதாரத் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மயூரா ஹொட்டல், இல 46, கதிரேசன் வீதி, கொழும்பு 13 இல் இருந்து பயணித்த குறித்த நபர் 25. 10. 2020 அன்று காலை 10மணிக்கு வவுனியா – கொழும்பு அரச பேருந்தில் பயணித்து மாலை வவுனியாவை வந்தடைந்துள்ளார். அங்கிருந்து பிற்பகல் 4.00 மணிக்கு வவுனியா – யாழ்ப்பாணம் தனியார் பேருந்தில் பயணித்து பரந்தன் சந்தியில் இறங்கியுள்ளார். பரந்தன் சந்தியில் பழக்கடையில் பழங்கள் வாங்கியுள்ளார். பின்னர் மாலை 6.15 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்து தருமபுரத்தில் இறங்கியிருக்கின்றார்.

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்து தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதாரத் துறையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.