பெருஞ் சீரகத்தின்  மருத்துவப் பயன்கள்.

பெருஞ் சீரகத்தின்  மருத்துவப் பயன்கள்.

? பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

? சோம்பு, ஈரல் நோயைக் குணமாக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன் கலந்து தினந்தோறும் இரு வேளைகளிலும் 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

? வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு, சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் சரியாகும்.

? சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் மற்றும் வறண்ட இருமல் போன்றவை குணமாகும்.

? சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

? சோம்பின் சூடான கசாயம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.

? சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

? சோம்பிற்கு எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மையுண்டு. எனவே உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை, கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

? அதிகளவு குளிர் காய்ச்சல் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

? சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, தினந்தோறும் வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

Leave A Reply

Your email address will not be published.