அரச வாகனத்தை மீள ஒப்படைத்த பிரேமதாஸவின் மனைவி ஹேமா.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ, அரசால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனால், அரசால் கொடுக்கப்பட்ட வாகனத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ மீண்டும் அரசிடமே ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.