வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை.

வெளி மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமது தேவை கருதிவருகை தருவோர் தம்மை பதிவுசெய்யுமாறு கிளிநொச்சி மாவட்டச்செயலகம் அறிவுறுத்தல் .

பதிவுகளை நீங்கள் தங்கியுள்ள பிரதேசத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது கிராம அலுவலரிடம் அல்லது பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது சமுர்த்தி அலுவலரிடம் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்களை மறைத்து தங்கியுள்ளோர் தங்குமிடங்களை வழங்கியோர் தொடர்பில் கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதனால் அந்
நடவடிக்கையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.