காலிஃபிளவர் பக்கோடா சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: நடந்தது என்ன?

இந்தியா சென்னை, சைதாப்பேட்டையில் காலிஃபிளவர் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரிதா என்ற பெண்ணே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நன்றாக பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்த குறித்த பெண், திடீரென வாந்தி எடுத்து, வாயில் நுரைதள்ளி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“பிரேத பரிசோதனைக்கு பிறகே காரணம் தெரியவரும்”எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.