யாழ்ப்பாணம் அல்வாயில் 9 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்.

அல்வாயில் 9 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்

அல்வாய் பகுதியில் இன்று (6) ஒன்பது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போலியாகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் மூலம் மீன் விற்பனையில் ஈடுபட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அல்வாய் பகுதியைச் சேர்ந்த அவருடன் நெருங்கி பழகிய உறவினர்கள் சிறுவன் ஒருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய அல்வாய் J/378 கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த மனோகரா கவிஞர் செல்லையா வீதியில் உள்ள 9 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.