பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரணா வைரஸ் தொற்று.

ராகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நோய் நிலைமை காரணமாக நேற்று (05) ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய 10 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.