பெருமளவு போதை மாத்திரைகளுடன் யாழில் 2 இளைஞர்கள் சிக்கினார்கள்!
யாழ்ப்பாணம் நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த
இரகசியத் தகவலுக்கமைய கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த அவர்களைச் சோதனையிட்டபோதே போதை மாத்திரைகள் வைத்திருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து சந்திபி பகுதி அருகில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் தொடர்பாக பொலிஸாரின் கைது நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தட்டுப்பாடு காரணமாக சந்தேகநபர்கள் பத்து போதை மாத்திரைகள் அடங்கிய அட்டையை 3 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
