ரயிலில் மோதி ஆண் ஒருவர் மரணம்!

ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் களனி – வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.