வவுனியாவில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது

நீர்பாசன, குடிநீர், மின்சாரம், வீடமைப்பு,வீதிகள்,நகர அபிவிருத்தி என முக்கியமான விடயங்கள் பற்றி கலந்தாலோசனை.

மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் சிந்தனையில் உதயமாகிய “சுபீட்சத்துக்கான நோக்கு” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்டத்திலான சமூக பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் அதனோடு இணைந்த இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கியவாறு நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அக்குழுக்கள் விஜயம் செய்யவுள்ளது.இதனை அடிப்படையாகக் கொண்டு வன்னி மாவட்டடத்தை மையப்படுத்தி மாவட்ட மட்டத்திலான மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோருடனான கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்பு சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(07.11.2020) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் கௌரவ.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,வட மாகாண ஆளுனர் திருமதி பீ.எம் சார்ள்ஸ், கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ நிமல் லன்ஸா,கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிஷாந்த, மற்றும் மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், அகழிகள் மற்றும் குடியிருப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஸ்ரீ பால கம்லத், கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருந்த,ஆகியோருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.