கிளிநொச்சி மாவட்ட கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழான கூட்டம்.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்திற்கான கூட்டம் யாழில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் (06) நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சரவை அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன.
1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு
2. வாழ்வாதார மேம்பாட்டு குழு
3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு
4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு
இதில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டமே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இடம்பெற்றது .

இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் தரவுகளை முன் வைத்தனர்.
இக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர்களான கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸ், யாழ் மாநகர மேயர், நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை அதிகாரிகள், யாழ், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், யாழ், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), யாழ், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் என பல தரப்பினரும் இங்கு கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான தரவுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்களால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.கிராம மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அமைப்பினை உருவாக்கல் தொடர்பான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை திறம்பட பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுதல் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நீர், மின்சாரம்,வீதி புனரமைப்பு , மீள்குடியேற்றம்,வீடமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள்,Covid19 தொற்றிடர் நிலையில் இவற்றை முன்னெடுத்துச் செல்வதிலுள்ள தாமதங்கள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.