தட்டுவன்கொட்டிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஏ – 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட ஆனையிறவு – தட்டுவன்கொட்டிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் பஸ் தரிப்பிடத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
