மறைந்த தென் மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் இன்று இறுதி அஞ்சலி.

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று அங்கு நேரில் சென்ற வடக்கு மாகாண ஆளுநர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உறவினர்களுக்கு தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.