சஜித் அணிக்கு ஹரின் அழைப்பு.

எதிரணியினரின் அரசுக்கு எதிரான அடுத்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார்.

நுகேகொடையில் இன்று நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அத்துடன், கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும் இனி வரும் என்று உதய கம்மன்பில தமதுரையின்போது குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.