வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் மிருத்திஞ்ச ஹோம யாக பூஜை.

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் மிருத்திஞ்ச ஹோம யாக பூஜை
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டை மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்க ஆசி கோரும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மத வழிபாட்டு தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட அராசாங்க அதிபர் க.விலமநாதன் அவர்களின் பங்குபற்றலுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் யாக பூசை அபிசேகங்கள் வெகு சிறப்பாக ஆலய பிரதமருக்கள் கந்ததாசகுருக்கள் தலைமையில் ஜந்து குருக்களினால் மிருத்திஞ்ச ஹோம யாக பூசை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ் வழிபாட்டில் ஆலய நிர்வாகத்தினருடன் மாவட்ட அரசாங்க அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள்,கிராம அலுவலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்காக ஆசிவேண்டி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.