2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று

இந்த ஆண்டிற்காக முதலாவது சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளதுடன் இதனை வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை நிகழவுள்ள சூரிய கிரகணத்தை இலங்கை மக்கள் அரைச் சூரிய கிரணமாக அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 10.20 மணியளவிலும் யாழ்ப்பாணத்தில் 10.24 மணியளவிலும், மாத்தறையில் 10.34 மணியளவிலும் இந்த அரைச்சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரைச்சூரிய கிரகணத்தை இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவதானிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.