யாழ்ப்பாண மாவட்ட இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்களின் கலந்துரையாடல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்களின் கலந்துரையாடல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் இடையேயான ஒரு கலந்துரையாடல்  (08.11.2020) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ தலைமையில், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்  அங்கஜன் இராமநாதன் பங்கேற்புடனும் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் இளம் கலைஞர்கள் குறும்பட தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் தமது அடையாள அட்டை பெற்றுகொள்வதிலுள்ள இடர்பாடுகள் உட்பட கலைஞர்களின் பல தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது மற்றும் “பத்மபூசணம்“ விருது பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் இழுபறி நிலமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ அவர்கள் COVID – 19 இடர் பிரச்சனைகள் தீர்ந்த பின் யாழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை மாவட்டத்திற்கு வெளியே நடாத்துவதன் ஊடக இங்கு உள்ள பல்வகை கலைஞர்களை வெளிஉலகிற்கு எடுத்துகாட்டுவோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.