தெலங்கானாவில் கொடூரம்: விஷம் வைத்து 15 குரங்குகள் கொலை; 80 குரங்குகள் கவலைக்கிடம்!
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொடுத்த விஷத்தை குறித்து 15 குரங்குகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் மர்ம நபர்கள் கொடுத்த விசத்தால் 80 குரங்குகள் மயக்கமடைந்து கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறது.
குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் கால்நடை வைத்தியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இ தனையடுத்து உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மர்ம நபர்கள் குரங்குகளை இப்பகுதி இங்கு கொண்டு வந்து விஷம் வைத்து கொன்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
