அரசமைப்புப் பேரவைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள்.

அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் சில தினங்களுக்கு முன்னர் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று நடைபெற்ற அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டது என்று தெரிகின்றது.

அதன்படி ஒஸ்ரின் பெர்னாண்டோ, ரஞ்சித் ஆரியரட்ன, பேராசிரியர் வசந்தா செனவிரட்ன ஆகியோர் சிவில் சமூகத்தின் சார்பில் புதிய உறுப்பினர்களாக அரசமைப்புப் பேரவைக்கு நியமனம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.