கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதம்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் இந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி விசேட திருப்பலிப் பூஜைகளுடன் நிறைவு பெறும்.

இந்த இரு நாள் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் எனத் திட்டமிடப்பட்டு அவர்களுக்கான இருப்பிடம், குடிதண்னீர் உள்ளிட்ட வசதிகளுடன் இறங்குதுறை போன்ற பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை இடம்பெறும் உற்சவத்தில் பக்தர்களுக்கான சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.