கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் தயார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.