பெருந்தொகை கேரளக் கஞ்சாவுடன் மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது! 

பெருந்தொகை கேரளக் கஞ்சாவுடன்
மன்னாரில் இளைஞர் ஒருவர் கைது! 

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, துருக்கி சிட்டிப் பகுதியில் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாப் பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (11) அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துருக்கி சிட்டி பகுதிக்குச் சென்ற பொலிஸார் 7 கிலோ 815 கிராம் கேரளக் கஞ்சாப் பொதிகளுடன் 29 வயது இளைஞரைக் கைதுசெய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.