வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை முன்னாயத்த கலந்துரையாடல்.

வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(12) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் உண்டாகும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ் அனர்த்த காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக குறித்த திணைக்கள தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், சமுர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பல்வேறு திணைக்களங்களின் உயரதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.