பூஸா சிறையில் இருந்து 7 பாதாள உலகத் தலைவர்கள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்.

இலங்கையின் அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக வெலிக்கடை புதிய சிறைச்சாலைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, வெலே சுதா, தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான், லொக்கு பெட்டி, பேக்கோ சமன், ஆர்மி சம்பத், மன்னா ரமேஷ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்தல் மற்றும் நிர்வாக ரீதியான அவசியப்பாடுகளைக் கருத்திற்கொண்டே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளின் வெளித்தொடர்புகளைத் துண்டிப்பதற்கும், சிறைச்சாலை ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமையாகும். வெலிக்கடைக்கு மாற்றப்பட்ட இவர்களுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.