மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

மல்வத்து மகா விகாரையில், சியாமோபாலி பீட மல்வத்து தரப்பின் அநுநாயக்க அதிவணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு அநுநாயக்க அதிவணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி, அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்து, அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர் பொலன்னறுவை சொலொஸ்மஸ்தானாதிபதி அதிவணக்கத்துக்குரிய வெண்டருவே உபாலி அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.