யாழில் பற்றைக்குள் சிக்கியது வெடிபொருள் பொதி!

யாழ்ப்பாணம், புங்குடுதீவுப் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் வெடிபொருட்கள் காணப்படுகின்றன என்று இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அவை நேற்று மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினரால் பிளாஸ்ரிக் பை ஒன்றில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் நான்கு டைனமற்கள் கல்லுடன் இணைத்துக் கட்டப்பட்டுக் காணப்பட்டதுடன் ரிக்னேட்டர் இரண்டும் இருந்துள்ளன.

அவை சதிச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச்  சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த வெடிபொருட்கள் ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.