பச்சிலைப்பள்ளி வீதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் பலி.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சற்று முன் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் செம்பியன்பற்று வடக்கு மாமமுனையை சேர்ந்த 40 வயது தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இன்று 3.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது

மேலதிக விசாரனைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.