வடமராட்சியில் வன்முறை சம்பவங்களில், 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

தீபாவளி தினமான நேற்று வடமராட்சியில் வன்முறை சம்பவங்கள், 12 பேர் மருத்துவமனையில்

தீபாவளி தினமான நேற்று துன்னாலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். துன்னாலை தக்கு சாம்பா பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திலேயே இருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே அல்வாய் நக்கீரன் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பத்துக்கு மேற்பட்டோர் நேற்றிரவு 10 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி தினமான நேற்று சனிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள விளையாட்டு கழகத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அடிதடியில் முடிந்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயமடைந்த 10 அதிகமானோரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.