புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் யாழ் ஆயரால் திறந்து வைக்கப்பட்டது.

புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் யாழ் ஆயரால்ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆயரால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணார்ட் ஞானப்பிரகாசம் அவர்களினால், புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்கும் புனித மடுத்தினார் சிறிய குருமட சிற்றாலயம் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புனித மடுத்தினார் குருமடம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது குருமடம். இது 150 ஆண்டுகளை தாண்டி இன்றும் யாழ் மறைமாவட்ட அருட்பணியாளர்களை உருவாக்கும் சிறிய குருமடமாக திகழ்ந்து வருகின்றது.

151வது ஆண்டுக்குள் காலடி பதிக்கும் இக்குருமடம் யாழ் மறைமாவட்ட ஆயரின் வழிநடத்தலில் தற்போதைய குருமட அதிபர் அருட்திரு பாஸ்கரன் அவர்களின் முயற்சியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.