இன்று மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 704 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.