ஜயன்கன்குளம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் வரலாற்றுச் சாதனை.

முதற்தடவையாக சாதனை படைத்த ஜயன்கன்குளம் மகாவித்தியாலம்!

பாடசாலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்த ஆண்டு 2020 புலமை பரிசில் பரீட்சையிலேயே மூன்று மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் அதிகஸ்ரபிரதேசத்தில் அமைந்துள்ள ஜயன்கன்குளம் மகாவித்தியாலயத்தில் மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளியினை தாண்டி சாதனை படைத்துள்ளார்கள்.

சு.டிசான்,ஆ.கிருத்திகா,கி.ஜெர்சன் ஆகிய மூன்று மாணவர்களே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இந்த மாணவர்களை சித்தியடைவதற்காக அயராது உழைத்த அதிபர்,மற்றும் சர்மிலன் ஆசிரியரின் கடின கற்பித்தல் நடவடிக்கையின்காரணமாகவும் ஏனைய ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஜயன்கன் குள கிராம மக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.