விஜயராம சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழப்பு.

கொழும்பு  ஹைலெவல் வீதியின் விஜயராம சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார்சைக்கிளும் பஸ்ஸும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, 23 மற்றும் 22 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

மத்துகம மற்றும் வெலிமடை பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.