விதைப்பொதி வழங்கும் வைபவம்.

வீட்டுப்பொருளாதாரம் போசனையை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட செயற்றிட்டமானது
09.11.2020 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலக பிரதேச செயலாளர்             கு. பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம் பெற்றது.

இவ் விதைப்பொதி வழங்கும் வைபவத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரால் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட 50 செய்கையாளர்களுக்கு பாகல், வெண்டி, பயிற்றை, வெள்ளரி, பசளி, கீரை என்னும் ஆறு வகை விதைகள் உள்ளடக்கிய விதைப்பொதிகள் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள். உதவி பிரதே செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்,          தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ,கிராம மட்ட உறுப்பினர்கள் ஆகியோரால் விதை பொதிகள் வழங்கிப்பட்டன .

Leave A Reply

Your email address will not be published.