இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல விருதுகளை வென்ற குறுபடம் வெளியீடு.

மன்னார் மாவட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற The Border குறும்படம் நவ.20 இல் வெளியாகின்றது!

மன்னார் மாவட்டம் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வரும் இந்திய இழுவப்படகுகளால் மன்னார், யாழ்பாணம், பருத்தித்துறை மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்தும் பல சுவாரஸ்ய சம்பவங்களை மையப்படுத்தியும் இக்குறும்படம் மன்னார் மாவட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குறுமபடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றி பல விருதுகளை பெற்றுள்ளது. இக்குறும்படத்தினை பார்வையிட்ட தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களான வெற்றிமாறன், ராம் மற்றும் அமீர் ஆகியோர் வெகுவாக பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.