மடு வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி கெளரவிக்கப்பட்டார்..

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி  புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்பட்டார்.

மடு கல்வி வலயத்தில் ஆண்டாங்களம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி விக்ரர் சாள்ஸ் பிரதிக்சா தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்றுள்ளார்.

குறித்த மாணவிக்கு மடு வலயக்கல்வி பணிப்பாளர் கே.சத்தியபாலன் பதக்கம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.

குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.