வத்தளையில் ஆண் ஒருவர் சுட்டுக்கொலை! – பிறந்தநாள் விழாவில் பயங்கரம்.
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை, மட்டக்குளிய பாலம் (கதிரண பாலம்) அருகே அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா வைபவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையே திடீரென இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
